தென் மாகாண தொகுதியின் முன்னாள் பிரதம அமைப்பாளராக கடமையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இன்று (01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக ஷான் விஜயலால் டி சில்வாவும் இன்று நியமிக்கப்பட்டார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பலாங்கொடை தொகுதியின் பிரதம அமைப்பாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஷான் விஜயலால் டி சில்வா, தென் மாகாண அமைச்சராக ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பதவி வகித்துள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த அவர், இன்றைய தினம் (01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.