தயாசிறி ஜயசேகர எம்.பி க்கு எதிராக நீதிமன்று தடையுத்தரவு..!!

tubetamil
0

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அவர் செயற்படுவதையும் அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தவறான பரிந்துரைகளை வழங்குவதையும் தடுக்கும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென, கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் செயலாளர் நாயகம் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னரே, நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்தது .


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top