கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்..!!

tubetamil
0

 தரம் 1, 5 ,6  மற்றும் உயர்தரம் தவிர்ந்த பிற இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான 2024 ஆம் ஆண்டுக்கு உரிய விண்ணப்பங்கள், உரிய பாடசாலைகளில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமென என கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்தப் பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருந்தால், அந்தந்த பாடசாலை அதிபர்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி நேர்காணல்களை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்புவார்கள்.

விசேட அறிவிப்பை வெளியிடும் போது, ​​தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரமே பாடசாலைகளில் தரம் 6 மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை இடம்பெறுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை தரம் ஒன்றிற்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், அதன் பின்னர் குறித்த அதிபர்களால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.பாடசாலைகளுக்கான அனுமதி கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top