ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவது நிச்சயம்..!!

tubetamil
0

 ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார் என அமைச்சர் ஹரின் பெரண்டான்டோ தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

”எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார்.” எனவும் அமைச்சர் ஹரின் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்திருந்தது. இதனால் கட்சிகள் தமது பிரசார நடவடிக்கைகளையும், கூட்டணி அமைக்கும் செயல்பாடுகளையும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தவாரம் அதன் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது. அதன் நிமித்தம் அடுத்தவாரம் கொழும்பில் பிரமாண்ட கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐ.தே.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சி அறிவிக்க உள்ளதாக அறிய முடிகிறது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் கருத்து அமைந்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top