அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரிப்பு

keerthi
0

 


கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு வருமானம் அதிகரித்துள்ளது.

219 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 274 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 11 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும்,மதுவரித் திணைக்களத்தின் வருமானமும்  எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 114 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனவே அரசாங்க வருமான அதிகரிப்பானது நாட்டு பிரஜைகளின் நலனை மேம்படுத்தும் என அமைச்சர் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top