யாழில் இளைஞன் விபரீத முடிவு..!

keerthi
0


யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் 29 வயதான இளைஞரொருவர் நேற்றையதினம் (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

அத்தோடு இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top