அதிகாலை கோர விபத்து : ஸ்தலத்திலேயே மூவர் பலி..!

keerthi
0

 



அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏ20 பிரதான வீதியின் 13ஆம் மற்றும் 14ஆம் மைல் கற்களுக்கு இடையே இன்று (09) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு      இந்த விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 15 வயதுடைய மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீதே கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும்      இதனையடுத்து குறித்த கெப் ரக வாகனத்துடன் அதன் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top