போர் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர்!

tubetamil
0

 தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, போர்க் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளமை தொடர்பில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு கட்டத்தில்  இராணுவம் வலுவிழந்திருந்தது. இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறைவடைந்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு தயாராக இருந்தனர்.

இந்நிலையில், ஜே.வி.பி கட்சியை சேர்ந்தவர்களே பெரும்பான்மை இளைஞர்களிடம் இனவெறியை தூண்டி இராணுவத்தில் இணைத்து இனப்படுகொலைக்கு வழிவகுத்தனர்” எனத் தெரிவித்துள்ளார். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top