பொது பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு..!!!

tubetamil
0

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடைபெறும் நாளிலும் அதன் பின்னரும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது  என  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் பாதுகாப்புக்காக 54,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top