தேர்தல் செலவீன காலம் முடிவடைந்தபோதும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை - ஜனாதிபதி மீது விடுக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு

tubetamil
0

ஊழல் மோசடிகளை ஒழிக்கப் போவதாக சூளுரைத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது தேர்தல் செலவீனத்துக்கான கால அவகாசம் முடிவடைந்த போதும் அதற்கான அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைக்காக பெற்றுக்கொண்ட நிதி மற்றும் அதற்கான செலவு தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி தேர்தல் நடைபெற்று 21 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் 18 வேட்பாளர்கள் மட்டுமே செலவுகளுக்கான அறிக்கையை சமர்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இவ்வாறான நிலையில், தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top