முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 143 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் பாதிப்பு

tubetamil
0

 முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 163 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.


இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,


மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 193 பாதிக்கப்பட்டுள்ளனர்.


கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மகள்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிசார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top