மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாம் ஏற்படுத்துவோம்- கலைச்செல்வி உறுதி..!

tubetamil
0

 சலுகை அரசியல், அடிமை அரசியல் என்பவற்றை நிராகரித்து கொள்கை ரீதியிலான மாற்றத்தை மலையக மக்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும்  இதன்மூலம் மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.



ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கட்டவாறு தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்திக்கு மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றி மகிழ்ச்சியளிக்கின்றது.


இது மூவின மக்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றியாகும். இந்த வெற்றியை நாம் வரவேற்கின்றோம்.


மாற்றத்துக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் என் சார்பிலும், கட்சி சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


நுவரெலியா மாவட்டமானது தேர்தல் காலத்தில் பாரம்பரிய இரு கட்சிகளுக்கு வாக்களிக்கப்படும் மாவட்டமாக பயன்படுத்தப்பட்டுவந்தது.


இந்த நடைமுறை இம்முறை தோல்வி கண்டுள்ளது.” எந அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top