சமூக ஊடகங்கள் மூலம் மோசடி செய்யும் நபர்கள் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு..!

tubetamil
0

 நாட்டில் தற்போது வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஆன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.



குறித்த விடயம் தொடர்பில் dir.ccid@police.gov.lk என்ற ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறித்த இதே வேளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல முறைப்பாடுகள் பதிவாகி வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


உங்களது தொலைபேசிகளுக்கு வரும் அநாமதேய இணைப்புகளை திறக்கவோ அல்லது OTP குறியீடுகள் அல்லது SMS அல்லது WhatsApp செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம்  என்றும் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top