வீதியால் சென்ற பெண்களை அச்சுறுத்தும் விதமாகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கூரிய ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பான இருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் நீதிமன்ற நீதவான் பி.சுப்பிரமணியம் நேற்று (06) உத்தரவிட்டார்.
பருத்தித்துறை கோரியடிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை(05) மாலை வீதியால் சென்ற பெண்கள் யுவதிகளை அச்சுறுத்தும் விதமாக கோஷ்டி ஒன்று ஈடுபட்டிருந்தது.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிசார் குறித்த குழுவை சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். இதில் சிலர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.