கங்குவா பட தோல்வியை தொடர்ந்து நடிகர் சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஸூரிய 45 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்தில் ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், விஜய் சேதுபதியிடம் இருந்து இன்னும் ஒப்புதல் வர படக்குழு காத்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விஜய் சேதுபதி ஒத்துக்கொண்டால் இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட் ஆக அமையும் என்பாத்து குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.