வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சிய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிசார் தெரிவித்தனர்.
சுன்னாகம் ஈவினை கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
150 லிட்டர் கோடா ஐந்து லிட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 55 வயது என போலீசார் தெரிவித்தனர்.
பிரதான போலீஸ் பரிசோதகர் உதய பாலா தலைமையில் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது பெண் கைது செய்யப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டனர்.