கொழும்பு பங்குச் சந்தையில் இன்று(23) முற்பகல் 11.45 மணி வரையான காலப்பகுதியில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 245 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
அதன்படி, வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண்னானது இன்று 15,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று காலை 11.45 மணி வரை பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.