இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அனுமதியின்றி ஒருவர் பிரவேசிததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளிதரப்பினர் அனுமதியின்றி இணையத்தளத்தில் அனுமதி இன்றி பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு (SLCERT) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, இலங்கை பொலிஸின் யூடியூப் சேனலும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.