வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது - விமான நிலையத்தில் அதிர்ச்சி!

tubetamil
0

 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

இந்த கைது நடவடிக்கையானது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (07) முன்னனெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது அநுராதபுரம், பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.



நீதவான் நீதிமன்றில் முன்னிலையில்  குறித்த சந்தேக நபர் டுபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டட   சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top