துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் - நாகஹவத்த பிரதேசத்தில் சம்பவம்.

tubetamil
0

மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 நேற்றிரவு காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 


உயிரிழந்தவர் தனது சகோதரரின் வீட்டில் இருந்து மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்தியதாகவும், மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

 துப்பாக்கிச் சூடு நடந்த போது, ​​இறந்தவரின் ஒன்றரை வயது மகளும் மனைவியும் காரில் இருந்துள்ளதுடன்,  உயிரிழந்தவர் பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள சமுர்த்தி மானிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நுகேகொட குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top