இலங்கையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளான 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை மீண்டும் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சர்ச்சை
அதன்படி, விடைத்தாள் திருத்தும் பணி 2025 ஜனவரி 08 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தத் தேர்வின் வினாத்தாள் வெளியானது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டு, நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.