தைப்பொங்கலை முன்னிட்டு இந்து மத கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகை!

tubetamil
0

 தைப்பொங்கல் என்பது தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையாக மட்டுமல்ல, குடும்ப பந்தங்களையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். இந்த பண்டிகையை முன்னிட்டு, சிறைகளில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த விசேட அனுமதி குறித்து சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க வெளியிட்ட தகவலின் படி, நாளைய தைப்பொங்கல் தினமான ஜனவரி 14ஆம் திகதி, அனைத்து சிறைகளிலும் இந்து மதக் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க முடியும்.


அதன்படி, கைதியின் உறவினர்கள் ஒருவருக்கு மட்டுமே சந்திப்பு அனுமதி வழங்கப்படும். மேலும், உறவினர்கள் கைதிகளுக்குப் போதுமான உணவு மற்றும் இனிப்புகளை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.


இந்த சந்திப்பு நிகழ்வுகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைச்சாலையின் விதிமுறைகளை கடைபிடித்து நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top