.சீனாவில் உயர்கல்வி பெற விண்ணப்பித்த இலங்கை மாணவர்களிடம் நேரில் சென்று தகவல்களை சேகரிக்கவுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்கள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Ningxia மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் விவரங்களை உடனடியாக தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் புலமைப்பரிசில் மூலம் உயர் கல்விக்காக சீனாவிற்கு வந்த மாணவர்களின் பதிவுகள் மாத்திரமே தற்போது தன்னிடம் உள்ளதாகவும் சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
சீனாவில் தற்போது புதிய வைரஸ் பரவி வருவதால், அங்கு தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் விவரங்களை அங்குள்ள இலங்கை தூதரகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.