மாற்றுமோதிரம் நிகழ்வு – ரீச்சாவில் ஏற்பாடு

tubetamil
0

 அருந்ததி நிறுவனம் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதி, மாலை 4 மணிக்கு ரீச்சாவில் மிக சிறப்பான மாற்றுமோதிரம் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின் ஏற்பாடு தொடர்பான அறிவிப்பு, யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அருந்ததி நிறுவனத்தின் இயக்குனர் கிருஷ்ணராஜ் மேகலா வெளியிட்டார்.



இந்த நிகழ்வில் அழகுக்கலை நிபுணர்கள் பலரின் ஆற்றுகைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சிகள், வித்தியாசமான ஒளியமைப்பு மற்றும் அலங்கரிப்பு ஆகியவற்றுடன் நிகழ்வு நடைபெறவுள்ளது. துவக்கப்பட்டு, பங்கேற்பாளர்கள் நிகழ்வை மிகவும் வித்தியாசமாக அனுபவிக்க முடியும் என்று அவர் கூறினார்.



யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் பங்குபற்றுனர்களுக்காக இருவழி போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்துடன் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கின்றனர்.


"ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வுகளை விட இந்த நிகழ்வு மிகவும் வித்தியாசமாக இருக்கும்" என்று கிருஷ்ணராஜ் மேகலா மேலும் குறிப்பிட்டார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top