இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய, மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததோடு, நினைவுப்பரிசு ஒன்றும் பெற்றுக்கொண்டார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்தார். இந்த சந்தர்ப்பத்தில், அவர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் நேரில் சென்று கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கல்லூரியின் அருங்காட்சியகம் மற்றும் மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார். அத்துடன், அங்கு விசேட உரையொன்றையும் நிகழ்த்தினார்.
இந்த சந்தர்ப்பத்தில், கல்லூரியின் அதிபர் பிரதமர் ஹரினிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி கௌரவித்தார்.
பிரதமரின் இந்த விஜயத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், பிரதமர் ஹரினி அமரசூரிய, இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புகளிலும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.