அமெரிக்காவின் புதிய விசா திட்டமான தங்க அட்டை விசா (Gold Card Visa) மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய இந்த விசா, 5 மில்லியன் டொலர் என்ற மிக உயர்ந்த விலையிலும் விற்பனைக்கு வந்ததுடன், அதற்கு மக்களிடையே எதிர்பாராத அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த விசா மூலம், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையை பெற வழி கிடைப்பதோடு, வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. புதிய திட்டத்தின் கீழ், ஒரே நாளில் 1,000 தங்க அட்டை விசாக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க அரசுக்கு மட்டுமே 5 பில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் குடியேற விரும்பும் பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர், இந்த விசாவை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இது அமெரிக்காவின் முதலீட்டு மயமான குடியேற்றக் கொள்கைக்கு ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.
தங்க அட்டை விசாவின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, இது அமெரிக்காவுக்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய வழியாக அமையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த விசா திட்டம் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.