பிரான்ஸ் விமானப்படையின் பயிற்சியின்போது இரண்டு ஆல்பா ஜெட் விமானங்கள் நடுவானில் மோதியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பைலட்டர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்த விபத்து நேற்றைய தினம் கிழக்கு பிரான்ஸின் ஹாட்-மார்னே பகுதியில் உள்ள செயிண்ட்-டிசியர் அருகே இடம்பெற்றுள்ளது. பயிற்சியின் ஒரு கட்டத்தில், விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கு முன் இரண்டு விமானிகளும் பாராசூட்டின் உதவியால் பாதுகாப்பாக தரை இறங்கியதாகவும், அவர்கள் தற்போது நலமாக உள்ளதாகவும் பிரான்ஸ் விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
விமானங்கள் விழுந்த பின்னர் ஏற்பட்ட தீவிபத்தில் அருகிலிருந்த தொழிற்சாலை முற்றிலும் எரிந்து நாசமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதுடன், மேலதிக சேதங்களை தடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்