இலஞ்சம் பெறுவதற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவால் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டார். இவர் விளக்கமறியலில் இருக்க, இந்த வழக்கு இன்றைய தினம் (ஏப்ரல் 1) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, இவ்வழக்கிற்கான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தகவலை ஏற்றுக்கொண்ட நீதிபதி தனுஜா லக்மாலி, வியாழேந்திரனை ஏப்ரல் 8ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது