தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் வெற்றிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம், ஒரு காலத்தில் வடிவேலுவுக்காக எழுதப்பட்டது என்பது தெரியுமா? இன்றுவரை ரசிகர்களால் விரும்பப்படும் இந்த திரைப்படம் உருவான பின்னணிக் கதை வியக்க வைக்கும் வகையில் உள்ளது.
1999-ம் ஆண்டு வெளிவந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தை இயக்கியவர் எழில். இதில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்தார். காதல் மற்றும் நகைச்சுவையை அழகாக இணைத்த இந்த படம், 200 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி, மெகா ஹிட் பட்டம் பெற்றது. ஆனால் இந்த வெற்றிப் படத்தின் கதையை முதலில் வடிவேலுவுக்கு கூறியிருந்தார் எழில்.
இருப்பினும், வடிவேலு இந்த கதையை ஏற்க மறுத்துள்ளார். “முதலில் வேறு ஹீரோக்களுக்கு சொல்லுங்கள். யாரும் நடிக்கவில்லை என்றால் நான் செய்கிறேன்” என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குநர் எழில், இப்படத்தின் கதையை விஜயிடம் கூற, அவரும் உடனே ஒப்புக்கொண்டுள்ளார். விஜயின் வரவுக்கேற்ப, சில மாற்றங்களுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது.
வடிவேலுவுக்கு முன்னதாக சென்ற கதை, தளபதி விஜயின் கையிலிருந்து ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது . தமிழ் சினிமாவின் திரைவெளியை மாற்றிய ஒரு முக்கிய திரைப்படமாக ‘துள்ளாத மனமும் துள்ளும்’ இன்று வரை அடிக்கடி பேசப்படும். இந்த தகவலை பத்திரிகையாளர் பிஸ்மி வெளியிட்டுள்ளார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.