பாதுகாப்பு மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை விஜயத்தின் போது கொழும்புக்குத் திரும்பாமல் அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து நேரடியாக இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, அனுராதபுரம் விமான நிலையம் ஒரு நாள் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு அனுராதபுரத்திலிருந்து தென்னிந்தியாவின் ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார். பாதுகாப்பு மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர் கட்டுநாயக்காவிற்குத் திரும்பாமல், சிறப்பு ஏற்பாடுகளைப் பயன்படுத்தி அனுராதபுரத்திலிருந்து தமிழ்நாட்டிற்குப் பயணித்தார். மோடி மற்றும் அவரது குழுவினருக்குத் தேவையான பயண அனுமதி வசதிகளை வழங்குவதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், ரத்மலானை, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகியவை இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.
அனுராதபுரம் விமான நிலையம் பொதுவாக சர்வதேச விமானங்களை இயக்குவதற்குத் தேவையான வசதிகளைக் கொண்ட விமான நிலையம் அல்ல. பெரிய விமானங்களை தரையிறக்கத் தேவையான உள்கட்டமைப்பு அதில் இல்லை. இந்தியப் பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்குத் தேவையான அனுமதியை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் ஜூலை 6 ஆம் தேதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
இதன்போது அனுராதபுரம் விமான நிலையம் ஒரு நாள் மட்டுமே சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சாகர கொட்டகதெனிய தெரிவித்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.