யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய 21 வயது இளைஞர்!!

Editor
0

 யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (26) யாழ். தாவடியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 21 வயதுடைய ஒரு இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடரும் விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட தாவடி சந்தியில் வைத்து காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளையடுத்து அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினரால் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top