தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெற்ற விபரீதத்தின் பின்னர் விஜய் முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூரில் இருந்து நேற்று முன்தினம் (27) அவசர அவசரமாக சென்னைக்குச் சென்ற விஜய், இரவு 11 மணிக்கு நீலாங்கரை வீட்டிற்குச் சென்றபின் வெளியேறவில்லை தற்போது தான் வெளியேறியுள்ளார்.
தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அவர் எங்கு செல்கிறார் என்ற உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.
.jpg)