நண்பர்களுடன் உல்லாசமாக நீராடிய இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

Editor
0

 கட்டான - கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


இறந்தவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.





ஹோட்டலின் நீச்சல் குளத்தில் பல நண்பர்களுடன் உல்லாசமாக நீராடி கொண்டிருந்த போது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் குறித்து கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top