யாழில் (Jaffna) குடும்பஸ்தர் ஒருவர் இனம்தெரியாத நபர்களினால் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம் குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா தினேஷ்குமார் (வயது 32) என்பவரே இந்த சம்பவத்தில் படுகாமடைந்துள்ளார்.
வாள்வெட்டு சம்பவம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பலாலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

