தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களில் குறிப்பிட தக்க முன்னணி இளம் நடிகராக வளர்ந்துள்ளவர் விஜய் தேவர்கொண்டா. தனக்கென ரவுடி என்கிற பெயரில் துணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வரும் அளவிற்கு முன்னேறி உள்ளார். அவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு மிகவும் கை கொடுத்த படமாக அமைந்தது எவடே சுப்பிரமணியம் என்கிற படம் தான் அவரை பிரபலமான ஹீரோ ஆக்கியது
ஆனால் எவடே சுப்பிரமணியம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வதற்கு புதிய உடைகள் வாங்க தன்னிடம் பணம் இல்லாததால் படப்பிடிப்பில் தான் பயன் படுத்திய உடைகளை அணிந்து கொண்டு தான் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் என்று சமீபத்தில் கூறியுள்ளார் விஜய் தேவர்கொண்டா
புதிய படங்களில் அறிமுகமாகும் புது முகங்களுக்கு இருக்கும் போராட்டத்தை தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதால் தான்
தற்போது சமீபத்தில் வெளியான லிட்டில் ஹெர்ட்ஸ் படத்தின் குழுவினர்க்கு தன்னுடைய சொந்த துணி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து
உடைகளை பரிசாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார் விஜய் தேவர்கொண்டா

