பாடசாலை வேன் மீது மோதிய இ.போ.ச பேருந்து ; நால்வர் காயம்!

Editor
0

 கொழும்பு - வொக்ஷோல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து இன்று  (30) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பாடசாலை மாணவர்கள் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் வேனின் சாரதியும் மூன்று பாடசாலை மாணவர்களும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top