இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு அருகில் : ட்ரம்ப் திட்டம் அங்கீகாரம் பெற்றது!!

Editor
0

 அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தை இஸ்ரேலின் அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

நேற்று (09.10.2025) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து, நீண்டநாள் ரத்தப்பாய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போர் நிறுத்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இஸ்ரேல் பிரதமர் அலுவலக பேச்சாளர் கூறியதாவது:


“அமைச்சரவை ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்திற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும். இதன்படி இஸ்ரேலிய இராணுவம் காசாவில் இருந்து பின்வாங்கும். மேலும் காசா பகுதியின் சுமார் 53 சதவீதம் மட்டுமே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும்.”

அதேநேரம், 72 மணி நேரத்திற்குள் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்றும், இறந்த 28 பேரின் உடல்களும் இஸ்ரேலுக்கு ஒப்படைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதற்குப் பதிலாக, இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள சுமார் 250 பாலஸ்தீன கைதிகளையும், காசாவில் உள்ள 1,700 கைதிகளையும் விடுவிக்கும் என பாலஸ்தீன தரப்பு அறிவித்துள்ளது.


ட்ரம்பின் திட்டத்தின் படி, ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதியின் எச்சங்களுக்கும் மாற்றாக 15 காசா வாசிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் ஏற்பாடும் இடம்பெறவுள்ளது. இதனுடன் மனிதாபிமான உதவிகளுடன் கூடிய நூற்றுக்கணக்கான லாரிகள் காசாவிற்குள் நுழைய தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top