கொடகவெல பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் மற்றும் 63 வயதுடைய தங்க வியாபாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூதாட்டத்தில் தோல்வி
ஹொரணை, கனன்விலவைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் சந்தேக நபர் காதல் தொடர்பில் இருந்து வந்ததாகவும், அவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டில் இருந்து இரண்டு மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போனதாக இளம் பெண்ணின் தந்தை ஹொரணைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.
அடிக்கடி வீட்டிற்குச் சென்றவர்கள் குறித்து முறைப்பாட்டாளரிடம் விசாரித்தபோது, மகளின் காதலன் பற்றிய தகவல்கள் தெரியவந்தன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காதலனே இந்த திருட்டைச் செய்திருப்பது தெரியவந்தது.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட தங்க நகைகள் கொடகவெல மற்றும் ஹொரணைப் பகுதிகளில் உள்ள பல அடகுக் கடைகளில் அடகு வைக்கப்பட்டு பணம் பெறப்பட்டதாகத் தெரியவந்தது.
திருடப்பட்ட தங்க நகைகளில் ஒரு தங்க சங்கிலி, காதணிகள், ஒரு வளையல், மோதிரங்கள் மற்றும் ஒரு பென்டன் ஆகியவை அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
