ரயில் தண்டவாளத்தில் விபத்தில் சிக்கிய லொறி ; போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

Editor
0

 கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை - கரித்தகந்தை பகுதியில் 52 1/2 மைல் தூண் அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


தண்டவாளத்தில் லொறி சிக்கியுள்ளதால், குறித்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்து காரணமாக சுமார் 5 அலுவலக ரயில்கள் தற்போது தாமதமாக இயங்குவதாக அம்பலாங்கொடை பொலிஸ் தெரிவித்துள்ளது.


தண்டவாளத்தில் சரிந்துள்ள லொறியை அகற்றி, ரயில் மார்க்கத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top