கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.2 கோடிக்கு மேற்பட்ட ‘குஷ்’ கைப்பற்று – யாழ்ப்பாண இளைஞர் உட்பட 3 பேர் கைது !!

Editor
0

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த யாழ்ப்பாண ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வான்பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

image                                                                  

காத்திருந்த இருவரும் கைது

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது,   போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ் நபர் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பயணியின் பயணப் பையின் ரகசியப் பகுதியில் இரண்டு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 116 கிராம் 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.அதேவேளை கைப்பற்றப்பட்ட குஷ்' போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 2 கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் (ரூபா 21,160,000) என மதிப்பிடப்பட்டுள்ளது. உடன் கைது செய்யப்பட்ட ஏனைய இருவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றி வருபவராவார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.                             

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top