பதுளை நகரிலுள்ள பிரபல உணவக கட்டடமொன்றில் இன்று காலை (04 ) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உணவக கட்டடம் தீக்கிரையாகியுள்ளது.
பதுளை மாநகர தீயணைப்பு படையினரின் கடும் முயற்சியினால் தீப்பற்றல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டப் போதிலும் உணவகத்திலிருந்த உணவு பண்டங்கள், உணவகத்தின் அத்தியாவசிய பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

உணவகத்திலிருந்து வெளியேற முடியாமல் புகை மண்டலத்தால் மூச்சு திணறலுக்குள்ளாகி காயங்களுக்குள்ளாகிய இரண்டு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகிறது.மேலும் தீ விபத்து சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.