களுத்துறை துப்பாக்கிச் சூடு: சந்தேக மோட்டார் சைக்கிள் பண்டாரகமில் மீட்பு !!

Author
0

களுத்துறை - வஸ்கடுவ, வாடியமங்கட பகுதியில் நேற்று (15) இரவு, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பண்டாரகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் இன்று (15) காலை பண்டாரகம - ஹொரன வீதியின் கொத்தலாவல சந்திக்கு அருகிலுள்ள வயல்வெளிக்கு அருகில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

அதன் மீது கறுப்பு நிறத்தை ஒத்த தலைக்கவசம் ஒன்றும், மோட்டார் சைக்கிளுக்கு அருகில் தரையில் கறுப்பு நிறத் துணியால் தைக்கப்பட்ட புதிய ஜாக்கெட் ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

அதற்கு சில அடிகள் தூரத்தில் உள்ள வயல்வெளிக்கு அருகில், மஞ்சள் நிற அரிசிப் பையில் இடப்பட்டிருந்த சப்பாத்து ஜோடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.குற்றத் தடயவியல் அதிகாரிகள் மற்றும் கைவிரல் அடையாளப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை முன்னெடுத்தனர்.

மோட்டார் சைக்கிள் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top