சுவிட்சர்லாந்தின் தேசிய விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளன.

Author
0

 சுவிட்சர்லாந்தின் தேசிய விமான சேவையான Swiss International Air Lines (SWISS) நிறுவனம், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு துபாய் மற்றும் தெல் அவீவ் நோக்கி இயக்கப்படும் தனது விமான சேவைகள் மீதான இடைநிறுத்தத்தை நீட்டித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது

.நிறுவனத்தின் அறிவிப்பின்படி, துபாய் (Dubai) நகரத்துக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் மார்ச் 4ஆம் திகதி வரை இயக்கப்படமாட்டாது. மேலும், இஸ்ரேலின் முக்கிய நகரமான தெல் அவீவ் (Tel Aviv) நோக்கி உள்ள சேவைகள் மார்ச் 8ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக SWISS தெமார்ச் 4ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates) வான்வழிப் பகுதியை தங்களது விமானங்கள் பயன்படுத்தாது என்றும், மார்ச் 8ஆம் திகதி வரை இஸ்ரேல், லெபனான், ஜோர்டான், ஈராக், ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் வான்வெளியையும் தவிர்க்கப்படும் என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை குறிவைத்து சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதையடுத்து, தெஹ்ரான் வளைகுடா பிராந்தியத்தில் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது.

இதன் விளைவாக அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு சூழ்நிலை பதற்றமடைந்துள்ளது. இந்த சூழ்நிலையை தொடர்ந்து SWISS நிறுவனம் கடந்த வார இறுதியில் துபாய் சேவைகளை ரத்து செய்ததுடன், தெல் அவீவ் சேவைகளையும் மார்ச் 7ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. தற்போது அந்த இடைநிறுத்த காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் Lufthansa குழுமத்தின் ஓர் அங்கமாக செயல்படும் SWISS, பயணிகளின் பாதுகாப்பே முதன்மை என வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு கட்டணத் திருப்பிச் செலுத்துதல் அல்லது விருப்பமான பின்னைய திகதிக்கு இலவசமாக முன்பதிவை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top