ஈரானிய தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு வீரர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது.ஈரானுடனான மோதலில் கொல்லப்பட்ட முதல் அமெரிக்க வீரர்களில் நான்கு பேரை அமெரிக்க இராணுவம் சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளது.
ஐயோவாவின் டெஸ் மொய்ன்ஸைச் சேர்ந்த 103வது சஸ்டைன்மென்ட் கட்டளையைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ ரிசர்வ் வீரர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
நான்கு வீரர்கள்
புளோரிடாவின் வின்டர் ஹேவனைச் சேர்ந்த 35 வயதுடைய கேப்டன் கோடி ஏ.கோர்க்,

நெப்ரஸ்காவின் பெல்லூவைச் சேர்ந்த 42 வயதுடைய சார்ஜென்ட் 1வது வகுப்பு நோவா எல். டைட்ஜென்ஸ்,
மினசோட்டாவின் வைட் பியர் லேக்கைச் சேர்ந்த 39 வயதுடைய சார்ஜென்ட் 1வது வகுப்பு நிக்கோல் எம். அமோர்,
அயோவாவின் வெஸ்ட் டெஸ் மொய்ன்ஸைச் சேர்ந்த 20 வயதுடைய சார்ஜென்ட் டெக்லான் ஜே. கோடி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
