மத்திய கிழக்கில் மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும், இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனை குறிப்பிடடுள்ளார்.
இலங்கையில்எரிபொருள் பற்றாக்குறை இல்லை
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர்,
இலங்கையில் அடுத்த 33 நாட்களுக்கு போதுமான டீசல் மற்றும் அடுத்த 27 நாட்களுக்கு பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாகவும் மார்ச் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் எரிபொருட்கள் கொண்ட கப்பல் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் இப்போதைக்கு எரிபொருள் பற்றாக்குறை இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
