முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத்ற்கு மஹிந்த தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Author
0

ஈரான் தலைலவர் கொல்லப்பட்டமை மஹிந்தவுக்கு அதிர்ச்சியாம்! இரங்கல் தெரிவிப்பு | Mahinda Rajapaksa Condoles Death Of Iranian Leader

  ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் (Mahmoud Ahmadinejad ) படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளித்துள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் இலங்கையின் நெருங்கிய நண்பராக செயற்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

அதன்படி, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய மேம்பாடு மற்றும் உமா ஓயா பல்நோக்கு திட்டம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கு அவர் (Mahmoud Ahmadinejad ) முக்கிய பங்காற்றினார் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் (Mahmoud Ahmadinejad ) குடும்பத்தினருக்கும் மஹிந்த தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top