கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேனமுல்ல முகாம் பகுதியில் வசித்து வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இன்று அதிகாலை வேளையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணை
உயிரிழந்தவர் கொழும்பு 15, ஹேனமுல்ல முகாம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
