மே 4: "3 இந்தியர்கள் காயம்.. கொழுந்துவிட்டு எரியும் தீ!"
"புஜைரா (Fujairah) துறைமுகப் பகுதியில் பெரும் பரபரப்பு! - ஈரானின் 3 ஏவுகணைகளை இடைமறித்து அழித்த அமீரகம்!"
ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா எண்ணெய் தொழில் மண்டலத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அங்குப் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அமீரக அதிகாரிகள் திங்கட்கிழமையன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்! 


ஈரான் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலால் புஜைரா எண்ணெய் முனையத்தில் "பெரும் தீ விபத்து" ஏற்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் தீவிர முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் மூன்று இந்தியர்கள் மிதமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் புஜைரா அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதல் மற்றும் தீ விபத்து நடந்த அதேவேளையில், ஈரான் ஏவிய மூன்று ஏவுகணைகளையும் அமீரகம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் தங்களின் வான்வெளி பாதுகாப்பானது மற்றும் அச்சுறுத்தல்கள் அற்றது என அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பிற்குப் பிறகு அமீரகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள முதல் பெரிய தாக்குதல் இதுவாகும்.
