அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.
அக்குரேகொட - தலங்கம பகுதியில் பெப்ரவரி 13 ஆம் திகதி வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீதான இரட்டை கொலை வழக்கில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச்செல்ல உதவிய காரை செலுத்திச்சென்ற நபரை அடையாளம் காணவும், கைது செய்யவும் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேகநபரின் விவரங்கள்
பெயர் - கலுவாரச்சி லியனகே நிலுக்ஷ வீரசிங்க
முகவரி - வீரசிங்க மல்பாலாவ, பரகொட, இமடுவ
தேசிய அடையாள அட்டை எண் - 199714103549
