யாழில் படகில் இருந்து விழுந்த அதிபர் உயிரிழப்பு; படகோட்டி கைது

Author
0

  யாழில் படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் ,படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்து நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவர் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் படகோட்டியை கைது செய்து , போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top